ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!
ஜோர்ஹட் தொகுதியில் பாஜகவின் ஹிதேந்திரநாத் கோஸ்வாமி முன்னிலை..
ஜோர்ஹட் தொகுதியில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய், தனது போடியாளரான பாஜகவின் ஹிதேந்திரநாத் கோஸ்வாமியை விட 19,626 வாக்குகள் பின்தங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜோர்ஹட் மக்களவைத் தொகுதி உறுப்பினரான கௌரவ் கோகோய் 43,882 வாக்குகளைப் பெற்றார். அதேவேளையில், அவருக்குப் போட்டியாகக் களமிறங்கிய ஹிதேந்திர கோஸ்வாமி 13 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 63,508 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கௌரவ் கோகோய் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கிறார். மறுபுறம், ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தவரும், இத்தொகுதியை அஸ்ஸாம் கன பரிஷத் தலைவராக மூன்று முறையும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டு முறையும் பிரதிநிதித்துவப்படுத்திய கோஸ்வாமி, மூன்றாவது தொடர் பதவியை எதிர்நோக்கியுள்ளார்.
Advertisement
மக்களவையின் துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் கௌரவ் கோகோய், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் டோபன் குமார் கோகோயை 1,44,393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.