மே. வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த சில நாள்களில்..! கொல்கத்தா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கொல்கத்தா வந்துள்ளது குறித்து...
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை (மே 23) காலை இந்தியாவின் கொல்கத்தா நகரத்துக்கு வந்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் கொல்கத்தா வருவது இதுவே முதல்முறையாகும்.
இதனைத் தொடர்ந்து, 4 நாள் பயணத்தின் முதல் நாளான இன்று கொல்கத்தாவில் இயங்கி வரும் மறைந்த அன்னை தெரேசாவின் ஆதரவு இல்லங்களின் தலைமையிடமான மதர் ஹவுஸுக்கு நேரில் சென்ற அமைச்சர் ரூபியோ அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Advertisement
Advertisement
இத்துடன், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று முதல்முறை ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவின் பயணம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இதையடுத்து, வரும் மே 26 ஆம் தேதி வரையிலான அமைச்சர் ரூபியோவின் இந்திய பயணத்தில் அவர் ஆக்ரா, ஜெய்ப்பூர் மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் கொல்கத்தா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.