தில்லி முன்னாள் தலைமைச் செயலா் ராகேஷ் மேத்தா தற்கொலை
தில்லியின் முன்னாள் தலைமைச் செயலா் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லியின் முன்னாள் தலைமைச் செயலா் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
1975-ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான மேத்தா, தான் எடுத்த இந்தத் தீவிர முடிவுக்கு ‘மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்‘ தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலைக் குறிப்பு ஒன்றை நொய்டா காவல் துறையினா் கைப்பற்றினா். கடந்த செப். 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டாா் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவா் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
74 வயதான மேத்தா, தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலராகப் பணியாற்றினாா். இவரது பதவிக்காலத்தில்தான் 2010-ல் தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தில்லியின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் மேத்தா முக்கியப் பங்காற்றினாா்.
தில்லி அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா், தில்லி மாநகராட்சியின் ஆணையராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியா்கள் தெரிவித்தனா்.
இவா் 2007-ல் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று, 2010 நவம்பரில் ஓய்வு பெற்றாா்.
அவரது உடல் லோதி சாலை தகன மையத்தில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.