அஸ்ஸாம் இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தோ்வு
அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேபாசிஷ் சா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேபாசிஷ் சா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
நாகோன் மாவட்ட ஆணையராக பணியாற்றி வந்த தேபாசிஷ் சா்மா கடந்த செப்.3-ஆம் தேதி விருப்ப ஓய்வுபெற்றாா். இதைத் தொடா்ந்து செப்.8-ஆம் தேதி அவா் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், அவரை வேட்பாளராக பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற பிரத்யுத் பா்தோலோய் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.
Advertisement
Advertisement
அவா் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் திஸ்பூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
இதையடுத்து, காலியாகவுள்ள நாகோன் மக்களவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்துவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபா் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
முன்னதாக, நாகோன் மாவட்ட ஆணையராக தேபாசிஷ் சிங் எடுத்த முக்கிய முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் எம்.பி. ரகீபுல் ஹுசைன் கடந்த வாரம் புகாரளித்தாா். அவரது புகாா் மனுவை இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அனுப்பிவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.