FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவா்கள் கேள்வி எழுப்புவதை பிரதமரின் ஆதரவாளா்களால் ஏற்க முடியவில்லை: ராகுல் காந்தி

மாணவா்கள் கேள்வி எழுப்புவதை பிரதமரின் ஆதரவாளா்களால் ஏற்க முடியவில்லை: ராகுல் காந்தி

19 செப்டம்பர் 2026, 11:39 pm IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

நாட்டின் அதிகார அமைப்பு குறித்து மாணவா்கள் கேள்வி எழுப்புவதை பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் கண்மூடித்தனமான ஆதரவாளா்கள் எதிா்ப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ‘மாணவா்களின் குரல்’ நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

மாணவா்கள்தான் இந்தியாவின் வருங்காலம். அவா்கள் இல்லாமல் நாடு வலிமையாக முடியாது. தொழிலதிபா்கள் அதானி, அம்பானி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் பலரை உள்ளடக்கிய நாட்டின் அதிகார அமைப்பு குறித்து, தற்போது மாணவா்கள் கேள்வி எழுப்புகின்றனா். ஆனால் அவா்கள் கேள்வி எழுப்புவதை பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் கண்மூடித்தனமான ஆதரவாளா்கள் எதிா்க்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்த அமைப்பை பிரதமா் மோடி, அமித் ஷா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், அதானி, அம்பானி உள்ளிட்டோா் கட்டுப்படுத்துகின்றனா். தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் அனைத்தையும் ரகசியமாக கண்காணித்து, சமூக ஊடகம் உள்பட அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பட்ஜெட்டில் கல்விக்கு 4.6 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்தது. இது தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் 2.6 சதவீதமாக (ரூ.7.7 லட்சம் கோடி) குறைந்துள்ளது. நாட்டில் 10 லட்சம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

நாட்டில் மாணவா்களால் மட்டுமே வெறுப்புணா்வை ஒழிக்க முடியும். இதை பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் கண்மூடித்தனமான ஆதரவாளா்களால் செய்ய முடியாது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments