இது தெரியுமா? தண்ணீர் கொதிக்கும்போது கொப்புளங்கள் வருவது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
தண்ணீர் கொதிக்கும்போது கொப்புளங்கள் வருவது ஏன்?
நீர் கொதிக்கும்போது இரண்டு வித கொப்புளங்கள் உருவாகின்றன.
தண்ணீரில் காற்று உள்ளது. தண்ணீரை சூடு செய்தவுடன் சிறு சிறு கொப்புளங்களாக பாத்திரத்தின் சுவர்களில் ஒட்டிக் காணப்படும். இது காற்றுக் கொப்புளங்கள். இதனால்தான் நீரில் வாழும் பிராணிகள் சுவாசிக்க முடிகிறது.
Advertisement
Advertisement
இந்த காற்று வெளியேறிவிடுகிறது. பிறகு 100 டிகிரி செல்ஷியஸில் (அல்லது 212 டிகிரி ஃபாரன் ஹீட்டில்) தண்ணீர் சூடேறிய பிறகு, நீரே ஆவிக் கொப்புளமாகிறது. இது நீராவிக் கொப்புளம்!
பின் சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தால் ஆவிக் கொப்புளம் உடைந்து நீருடன் கலக்கிறது! மறுபடி சூட்டினால் நீராவிக்கொப்புளம்! மறுபடி தண்ணீரின் அழுத்தத்தினால் கொப்புளம் உடைப்பு! இவ்வாறு மாறி மாறி நிகழும்.
Regarding rare information that children should know...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.