அரியலூர் அருகே லாரி மோதி பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்
அரியலூர், செப்17: அரியலூர் அருகே வி.கைகாட்டி பகுதியில் சென்ற பள்ளிப் பேருந்துடன் மணல் லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இன்
அரியலூர், செப்17: அரியலூர் அருகே வி.கைகாட்டி பகுதியில் சென்ற பள்ளிப் பேருந்துடன் மணல் லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. இன்று திருச்சியில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு அரியலூர் பெரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள் வந்த பஸ், ஜெயங்கொண்டம் சாலையில் அரியலூர் வி.கைகாட்டி பகுதியில் சென்றபோது லாரி மீது மோதியதில் பஸ் கவிழ்ந்தது. இதில்காயமடைந்தவர்கள் உடனடியாக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.