தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவருந்திய 58 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் இன்று காலை உணவருந்திய மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் இன்று காலை உணவருந்திய மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்துவரும் மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை விடுதியில் சாப்பிட்ட 58 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 48 பேர் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ள 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புட் பாயிசன் காரணமாக இவர்களுக்கு வாந்தி மயக்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.