அம்பானி குடும்ப வாரிசு ஆகாஷ் அம்பானியின் மணமகளாகக் கிசுகிசுக்கப்படும் ஸ்லோகா மேத்தா யார்?
மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து
அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். வரும் டிசம்பரில் அம்பானி மாளிகையில் திருமண மேளச்சத்தம் ஒலிக்கத் தொடங்கலாம். முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவியாக கிசுகிசுக்கப்படும்... (அட ஆமாங்க இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லையே! அப்போ கிசுகிசுக்கப்படும் என்று தான் சொல்லியாக வேண்டும்.) இளம்பெண் யார் தெரியுமா? அவரது பெயர் ஸ்லோகா மேத்தா. ஸ்லோகா மேத்தா வைர வியாபாரி ரஸ்ஸெல் மேத்தாவின் இளைய மகள்.
தெற்கு மும்பையில் வசித்து வரும் இந்த இரு பிரம்மாண்டமான குடும்பங்களும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் இல்லை. முன்பே இரு குடும்பங்களுக்கும் நல்ல அறிமுகமுண்டு. இந்த திருமண வதந்தியில் அதிகமாகக் கிசுகிசுக்கப் படும் மற்றொரு வதந்தி என்னவென்றால் ஆகாஷ் அம்பானியின் வரனாகக் கருதப்படும் ஸ்லோகாவின் தாயார் மோனா மேத்தா தற்போது வங்கிக் கடன் மோசடியில் சிக்கி நாட்டை விட்டு ஓடிப்போனவராகக் கருதப்படும் நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் என்பதே!
மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து முடித்தவர். அதாவது பள்ளிக்காலத்திலிருந்தே இருவருக்கும் நல்ல பரிச்சயமுண்டு.
Advertisement
Advertisement
பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின் பிரின்ஸ்டனில் மானுடவியல் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நிறைவு செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல தனது நண்பர்களுடன் இணைந்து ‘கனெக்ட்ஃபார்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றையும் ஸ்தாபித்து ஸ்லோகா நடத்தி வருகிறார்.
இப்போது வரையிலும் இரு குடும்பங்களும் இந்தத் திருமண விஷயத்தை வதந்தி என்று மறுத்து வந்தாலும். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 24 அன்று மும்பையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் காற்றில் ஒரு சேதி உலவுகிறது. மும்பையின் இரு மெகா பணக்காரக் குடும்பத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஸ்விட்சர்லாந்தில் வைத்து நடத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
Related Article
இன்னும் கொஞ்ச நாள் லீவு வேணும் மக்களே! சிகிச்சை விஷயத்தில் கோவா முதல்வரின் வெளிப்படையான அணுகுமுறை!
சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!
எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையின் போது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை எவை?
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் இன்றைய நிலை?!