என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!
தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள
மத்திய இணை அமைச்சரும், பிரபல பத்திரிகையாளராக அறியப்பட்டவருமான M J அக்பர் மீது ‘மீடூ’ பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு எதிர்வினையாக அக்பர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொள்ளவிருப்பதாகவும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமது பெயருக்கும், மதிப்புக்கும் களங்கள் கற்பிக்கும் வகையில் இம்மாதிரியான புகார்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டு வருவதாக அக்பர் தெரிவித்துள்ளார்.
தி இந்து பத்திரிகை நிர்வாகி என். ராம், அமைச்சர் அக்பரின் எதிர்வினை குறித்துப் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், ‘அமைச்சர் ராஜினாமா செய்யாதது நல்லது தான். ஏனென்றால், இப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவோ, பாலியல் வழக்கு குறித்து விசாரித்து போதுமான தகவல்களைப் பெறவோ போதுமான வாய்ப்புகள் அதிகமும் கிடைக்கும். ஒருவேளை அவர் ராஜினாமா செய்து விட்டாரென்றால் 15 நாட்களில் மக்கள் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள்.’ என்றார்.
Related Article
புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!
Advertisement
Advertisement
சோபியாவுக்கு தீவிரவாத ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகவை விமர்சிப்பவர்களுக்கான பகிரங்க அச்சுறுத்தல்!
அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.