வேகத்தடைகள் வாழ்க்கைக்கு தடையாக மாறிடக் கூடாது பாருங்க! அதான் இப்படி ஒரு கோரிக்கை!
அனுமதியின்றி கிராமத்தினரால் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கமுதி, ஜூலை 23 :
கமுதி அருகே உயரமாக அமைக்கபட்ட வேகத்தடைகளால் வாகனங்கள் பழுது அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்திருக்கின்றனா்.
கமுதியிலிருந்து இடைச்சியூரணி, பெருமாள்தேவன்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைபட்டி, முத்துப்பட்டி, அம்மன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு அரசு, தனியார் மினிபஸ் சேவை 8 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யபட்டது. இதனால் வாடகை வாகனங்கள், ஆட்டோ பயணங்களை நம்பியே இப்பகுதி மாணவா்கள் மேல்நிலை கல்வியும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனா். இந்நிலையில் இடைச்சியூரணியில் அளவுக்கு அதிகமான உயரத்தில் 4 வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளதால், வாடகை, தனியார் வாகனங்களின் இயந்திரத்தில் உரசி அடிக்கடி பழுதாகி, நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் இப்பகுதிகளுக்கு வாடகை வாகனங்களை இயக்க வாகன ஓட்டுநர்கள் மறுப்பதால், தனியார் வாகனங்களில் சென்று மேல்நிலை கல்வி, அத்தியாவசிய தேவைகளை பெற்று வந்த இப்பகுதி கிராம மக்கள் பாதிக்கபட்டுள்ளனா். எனவே அனுமதியின்றி கிராமத்தினரால் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
படம்: சித்தரிப்பு
Related Article
சட்ட விரோதமாக 4 பேரை கப்பலில் சென்னைக்கு அழைத்து வந்த கேப்டன் கைது!
புராரி கூட்டுத்தற்கொலை: எஜமானர்களின் இழப்பைத் தாங்க இயலாத வளர்ப்பு நாய் ஹார்ட் அட்டாக்கில் மரணம்!
லஞ்சம் கொடுக்க மறுத்த இளைஞரைக் கொடூரமாகத் தாக்கினார் காவல் உதவி ஆய்வாளர்!
‘தமிழகத்தில் பாா்ப்பனா்கள்’ என்ற நூலை வெளியிட்டார் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.