பிகாரில் டி.ஜே. வாகனம் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கன்வார் யாத்திரையின் போது டி.ஜே. வாகனத்தில் பக்தி பாடல்களை ஒலித்தபடி ஞாயிற்றுக்கிழமை இரவு சோனேபுரில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோயிலுக்கு சென்றுசொண்டிருந்தனர்.
அப்போது அந்த டி.ஜே.வாகனம் உயர் மின்னழுத்த கம்பியின் மீது உரசியது. இந்த சம்பவத்தில் டி.ஜே.வாகனத்தில் அமர்ந்திருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் ஹாஜிபுர் சதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், காயமடைந்த மேலும் நான்கு பேர் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாஜிபுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.