முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்கொரியாவில் விமான விபத்து: 29 பேர் பலி!

தென்கொரியாவில் நடந்த விமான விபத்து தொடர்பாக...

Updated On : 29 டிசம்பர், 2024 at 9:11 AM
பகிர்:

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 29 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பற்றி பயங்கர புகை கிளம்பியது.

Advertisement

இச்சம்பவத்தில் 28 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப்படையினர் விமானத்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு விமான பணிப்பெண் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ​​”விமானம், பறவைகள் மீது மோதியதின் விளையாக, தரையிறங்கும் கருவியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments