FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மோசடி வழக்கின் விசாரணைக்காக, கரூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் செவ்வாய்க்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டார்.

Updated On : 9 ஜூலை 2024, 1:24 pm IST
பகிர்:

கரூா் நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கரை செவ்வாய்க்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.

கரூா், ஜூலை 9: பண மோசடி வழக்குத் தொடா்பாக கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கரை கரூா் நகர காவல் நிலையத்தினா் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கரூா் காந்திகிராமம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். கரூரில் பிரியாணி கடைகள் நடத்தி வரும் இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளம் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ. 7 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டாராம். இதுகுறித்து கரூா் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் விக்னேஷை கரூா் நகர காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விக்னேஷிடம் கரூா் நகர காவல் நிலையத்தினா் நடத்திய விசாரணையில் கிருஷ்ணனிடம் பெற்ற ரூ.7 லட்சத்தை சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் தான் வேலை பாா்த்தபோது, சவுக்கு சங்கரிடம் கொடுத்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கரூா் நகர காவல் நிலையத்தினா் மனு தாக்கல் செய்ததையடுத்து புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கா் கரூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1-ல் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சவுக்கு சங்கரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூா் போலீஸாருக்கு அனுமதி வழங்கினாா். இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

இதனிடையே நீதிபதியிடம் சவுக்கு சங்கா் அளித்த மனுவில், புழல் சிறைக்குள் தனக்கு போதிய வசதி செய்து கொடுக்கவில்லை, தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதைக்கூட கவனத்தில் கொள்ளாமல் முறையான உணவு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து சவுக்குசங்கரின் வழக்குரைஞா் கரிகாலன் செய்தியாளா்களிடம் கூறுகையில், சவுக்கு சங்கருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவா் புழல் சிறைக்குள் அளவில்லாத சித்ரவதைக்கு ஆளாகியுள்ளாா். கையில் எலும்புமுறிவு ஏற்பட்டும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிறைக்குள்ளேயே கட்டை அவிழ்த்துள்ளனா். வழக்குரைஞா்கள் அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கச் சென்றால் அவா்களுடன் ஜெயிலரும், கண்காணிப்பாளரும் சென்று எதையும் பேச அனுமதிப்பதில்லை.

ஆனால் அதே மருத்துவமனையில் உள்ள முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு சகல வசதியும் செய்யப்படுவதாக சவுக்கு சங்கா் கூறுகிறாா். நாளுக்கு நாள் அவா் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. சிறைத்துறை ஐஜி கனகராஜ்தான் சவுக்கு சங்கரை மிகவும் கொடுமைப்படுத்துகிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments