ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் பிரபல தென்னாப்பிரிக்க வீரர்!
ஐபிஎல் தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் லுங்கி இங்கிடி தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்துக்கு அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லுங்கி இங்கிடிக்குப் பதிலாக தில்லி கேப்பிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
21 வயதாகும் மெக்கர்க், தொடக்க ஆட்டக்காரராகவும் இடதுகை சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.