ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது எப்படி? மஞ்ச்ரேக்கர் கூறுவதென்ன?
ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதிரடியாக விளையாடக் கூடிய டி20 வடிவிலான போட்டிகளிலிருந்து அவர்களால் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறும் விளையாட முடிவதை இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பார்க்க முடிந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு எப்படி இளம் வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மாடர்ன் பாப் பாடகர்களை கிளாசிக்கல் பாடல் பாடக் கூறினால், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிப் பழகிய இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்கேற்றவாறு சிறப்பாக விளையாடுகிறார்கள். டி20 வடிவிலான போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடிய தலைமுறை எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் அவர்களால் எப்படி சிறப்பாக செயல்பட முடிகிறது என்பது புரியவில்லை. ஏனெனில், டி20 வடிவிலான போட்டியில் பேட்டிங் செய்வதற்கும், டெஸ்ட் வடிவிலான போட்டியில் பேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களும் எடுத்து அசத்தினார். அதேபோல, அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மற்றொரு இளம் வீரர் மானவ் சுதர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Former Indian player Sanjay Manjrekar has stated that it is a baffling puzzle how players from the IPL generation perform well in Test cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.