தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது.
எல்லை தாண்டி மீன்பிடித்த போது, ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து விசைப் படகுகளில், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து,13 மீனவர்களையும் கைது செய்தனர்.
13 மீனவா்களைக் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Advertisement
இதையும் படிக்க: திருச்சி செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்
மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை, பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.