நிறைவடைகிறது பிரபலத் தொடர்: கண்ணீருடன் விடைபெற்ற நடிகை!
செல்லம்மா தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலத் தொடர் செல்லம்மா. இத்தொடரில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இத்தொடர் கடந்த மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் செல்லம்மா தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் நடிகை அன்ஷிதா சக நடிகர்களை பிரிவதை எண்ணி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பிரபலமைடைந்த செல்லம்மா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது இத்தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்த நேரத்தில் கண்மணி அன்புடன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த புதிய தொடரில் நவீன் வெற்றி மற்றும் துஷிதா(கிரேசி தங்கவேல்) ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.