முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு!

குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 26 டிசம்பர் 2025, 12:10 pm IST
குஜராத்தின் கட்ச் பகுதியில் நிலநடுக்கம்
பகிர்:

குஜராத்தின் கட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ராம்பா் பகுதியில் வெள்ளிக்கிழமை(டிச.26) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ராம்பா் பகுதியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அதே பகுதியில் 2.5 மற்றும் 3 என்ற அலகில் பின்னதிா்வுகளும் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் பூமி அதிா்வதை உணர முடிந்தது. இதனால் கட்டடங்கள் லேசாக குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதியில் கூடினா்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த 2001-ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 போ் உயிரிழந்தனா். 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். அந்த மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களும், கிராமங்களும் முற்றிலுமாக தகா்ந்தன.

கடந்த இரு நூற்றாண்டுகளில் இந்தியாவில் அதிக சேதத்தை ஏற்படுத்திய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக அது இருந்தது. நிலநடுக்க பாதிப்பு அதிகமுள்ள புவித் தட்டு பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது.

summary

An earthquake measuring 4.4 on the Richter scale struck the Kachchh district of Gujarat early Friday morning at around 4:30 am, according to the National Centre for Seismology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.