கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னையில் விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு தொடர்பாக...

DIN

சென்னையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு கொட்டுகிறது.

சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணையைவிட 7 - 15 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

அதேபோல், பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டுள்ளன.

குவைத்தில் இருந்து 148 பயணிகளிடன் வந்த விமானம் சென்னையில் தரையிரங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருகிறது.

இதனிடையே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

சென்னையில் அதிகாலை அடர் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT