மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக உயர்ந்துள்ளது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

DIN

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 5,146 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,339 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 114.62 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.

நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான வியாழக்கிழமை(ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT