வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு குறித்து...
சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீடு, மற்றும் மணிமங்கலத்தில் உள்ள வீட்டில் திங்கள் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் வீட்டில் சோதனையிட்டு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது திரும்பிச் சென்றுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்னை எங்கேயும் போகவிடமால் சிறை பிடித்துள்ளதாகவும், ராகுல் காந்தியுடன் பிரசாரம் செய்ய செல்வதை தடுக்க முயற்சிப்பதுடன் சோதனை மூலம் அச்சுறுத்த நினைக்கின்றனர் என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.