FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!

தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வுத் தொகையை மத்திய அரசு விடுவித்திருப்பது குறித்து...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:57 pm IST
அனைத்து மாநிலங்களுக்குமான வரிப் பகிர்வுத் தொகை விடுவிப்பு - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்குமான வரிப் பகிர்வுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்காக மத்திய அரசு இன்று (ஆக. 1) மாநிலங்களுக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ.1,09,019 கோடியை விடுவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகையாக ரூ. 4,466 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Advertisement

Advertisement

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அதிகபட்சமாக ரூ. 19,208 கோடியும், பிகாருக்கு ரூ. 10,845 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ. 8,010 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 7,866 கோடி, மகாராஷ்டிரத்துக்கு ரூ. 7,022 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ. 6,460 கோடி, ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 4,597 கோடி, ஒடிஸாவுக்க் ரூ. 4,819 கோடி, கர்நாடகத்துக்கு ரூ. 4,504 கோடி, ஜார்கண்ட்டுக்கு ரூ. 3,660 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி, மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி மற்றும் நலன்சார்ந்த செலவினங்களுக்காகவும் ஏதுவாக நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

summary

Centre releases Rs 1.09 lakh crore additional tax devolution to states to boost development spending

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments