முகப்பு
செய்திகள்

சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே பேஷியல் செய்யலாம்!

மாறி வரும் அன்றாடப் பழக்கங்களால் சருமப் பிரச்னைகள் அதிகரிப்பதும் அதனை சரிசெய்ய அழகு நிலையங்கள், சிகிச்சைகள் என்று செல்வதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது.

Updated On : 19 டிசம்பர் 2022, 4:53 pm IST
பகிர்:

மாறி வரும் அன்றாடப் பழக்கங்களால் சருமப் பிரச்னைகள் அதிகரிப்பதும் அதனை சரிசெய்ய அழகு நிலையங்கள், சிகிச்சைகள் என்று செல்வதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆனால், வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு இதனை எளிதாக படிப்படியாக சரிசெய்ய முடியும். 

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். உடலுக்கு நீரேற்றம் அளிக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும். 

Advertisement

Advertisement

வெளிப்புற அழகு பராமரிப்பு என்றால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பழங்களைக் கொண்டு பேஷியல் செய்யலாம். 

பப்பாளி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடலாம். பழத்தை நன்றாக மசித்து அப்படியே பயன்படுத்தலாம். 

அல்லது மிக்சியில் போட்டு அரைத்தோ முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். ஒரு 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிவிடுங்கள். இதனை தொடர்ந்து செய்துவர சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயைப் பயன்படுத்துங்கள். வெள்ளரிக்காய் பேஸ்ட்டை கண்களை சுற்றி அப்ளை செய்யலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் வைக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments