FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மக்களைவைத் தேர்தல் 2019

பாலாறு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்

விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு எழுப்பி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால் வறண்டு பாழான பாலாறு,

Updated On : 19 மார்ச் 2019, 1:36 am IST
பகிர்:


விதிமுறைகளை மீறி ஆந்திர அரசு எழுப்பி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால் வறண்டு பாழான பாலாறு, நீராதாரம் பெறப்போவது எப்போது என்பதே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவாகும்.
தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் மட்டும் நீடிக்கும் இந்தப் பிரச்னை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இந்த மாவட்ட தொகுதிகளில் பெரும் கேள்வியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகி கர்நாடகம், ஆந்திரம் வழியாக வாணியம்பாடி அருகே தமிழகத்தில் நுழையும் பாலாறு, இங்குதான் அதிகபட்சம் 222 கி.மீ.தூரம் பயணிக்கிறது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கும் பாலாறுக்கு 7 துணை ஆறுகளும் உள்ளன.
விதிமுறைகளை மீறி பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு 3 தடுப்பணைகளும், ஆந்திர அரசு சிறிதும், பெரிதுமாக கட்டியுள்ள 21 தடுப்பணைகளால் தமிழகத்தில் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்த பாலாறு தற்போது வறண்டு பாழ்பட்டுள்ளது. அத்துடன், தொடரும் மணல் சுரண்டலால் பாலாற்றின் பெரும்பகுதி 20 முதல் 50 அடி ஆழத்துக்கு பள்ளங்களாகி விட்டன. இதனால், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் பாசன பரப்புகள் சுருங்கியதுடன், குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க ஒகேனக்கல்லிலிருந்து குழாய் மூலம் காவிரி குடிநீரை விநியோகிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் இந்தப் பிரச்னைகளை தீர்க்க தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டு கனவு. ஆனால், தேர்தல் வரும் சமயங்களில் இந்தத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாவதும், பிறகு கிடப்பில் போடப்படுவதும் தொடர் கதை. 
எனவே, பாலாறு விவகாரம் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் பெரும் கேள்வியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments