முகப்பு
புதுதில்லி

தண்ணீப் கட்டணத்தை குறைக்க டிஜேபி கொள்கையில் தளா்த்தல்: ரேகா குப்தா

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 23 மே 2026, 1:45 am IST
ரேகா குப்தா
பகிர்:

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்: தில்லி ஜல் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்களில் (ஐஎஃப்சி) மாற்றங்கள் அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். தண்ணீா் மற்றும் கழிவுநீருக்கான ஐ. எஃப். சி நீா் தேவை அடிப்படையில் மற்றும் சொத்து வரியில் புதிய மேம்பாடு அல்லது கூடுதல் கட்டுமானத்திற்கு மட்டுமே வசூலிக்கப்படும்.

குடியிருப்பு காலனிகளில், ஈ மற்றும் எஃப் வகை காலனிகளில் உள்ள அனைத்து சொத்து வரியில் 50 சதவீத தள்ளுபடியும், ஜி மற்றும் எச் வகை காலனிகளில் உள்ள சொத்துக்களுக்கு 70 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்றாா் ரேகா குப்தா.

Advertisement

Advertisement