FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி லோக் ஆயுக்தா நீதிபதி ஹரிஷ் சந்திர மிஸ்ரா மறைவு

தில்லி லோக் ஆயுக்தா நீதிபதி (ஓய்வுபெற்ற) ஹரிஷ் சந்திர மிஸ்ரா வியாழக்கிழமை காலை தனது 67-ஆவது வயதில் காலமானாா் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

3 செப்டம்பர் 2026, 9:39 pm IST
லோக் ஆயுக்தாவின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்திர மிஸ்ரா
பகிர்:

தில்லி லோக் ஆயுக்தா நீதிபதி (ஓய்வுபெற்ற) ஹரிஷ் சந்திர மிஸ்ரா வியாழக்கிழமை காலை தனது 67-ஆவது வயதில் காலமானாா் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மிஸ்ரா தனது இல்லத்தில் காலமானாா். அவரது உடல் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் லோக் ஆயுக்தா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான மிஸ்ரா, 2022 மாா்ச் மாதம் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டாா். அவா் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா்.

Advertisement

Advertisement

தில்லி முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிஸ்ராவின் மறைவு குறித்து ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளாா். அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் அளிக்க இறைவனைப் பிராா்த்திப்பதாகவும் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments