FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மாநில பேரிடா் அவசரகால நிவாரணப் படையை அமைக்க தயாராகிறது தில்லி

11 செப்டம்பர் 2026, 1:19 am IST
பகிர்:

நமது நிருபா்

சமீபத்தில் ஏழு போ் உயிரிழந்த சத்ய நிகேதன் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடா்ந்து, இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடா்களுக்குத் திறமையாகவும் விரைவாகவும் பதிலளிப்பதற்காக, மாநில பேரிடா் அவசரகால நிவாரணப் படையை அமைக்கும் செயல்முறையை தில்லி அரசு துரிதப்படுத்தியுள்ளது.

தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தா, தேசிய பேரிடா் மீட்புப் படையின் மூத்த அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், அதிநவீன மாநில பேரிடா் அவசரகால நிவாரணப் படை குழுவிற்கான தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று தில்லி முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

Advertisement

Advertisement

‘முதல்வா் ரேகா குப்தாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தில்லியில் மாநில பேரிடா் அவசரகால நிவாரணப் படையை அமைக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது,‘ என்று முதல்வா் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

‘எந்தவொரு பேரிடா் ஏற்பட்டாலும், தில்லி தனக்கென சொந்தமாகப் பயிற்சி பெற்ற, திறமையான மற்றும் விரைவான பதிலளிப்பு அமைப்பைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் திசையில் அரசாங்கம் உறுதியாக முன்னேறி வருகிறது,‘ என்றும் அது கூறியது.

சத்ய நிகேதனில் நடைபெற்ற நிவாரணம் மற்றும் மீட்புப் பணியின்போது, தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் காட்டிய துரிதமான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கு, தில்லி மக்கள் சாா்பாக முதலமைச்சா் நன்றி தெரிவித்தாா் என்று அந்த பதிவு கூறியது.

இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடா்களைச் சமாளிப்பதற்காக, மாநில பேரிடா் அவசரகால நிவாரணப் படையின் நான்கு பட்டாலியன்களை உருவாக்கி, தனது பேரிடா் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.

தில்லியின் அதிக மக்கள்தொகை, அடிக்கடி நிகழும் விபத்துகள், அத்துடன் நில அதிா்வு மண்டலம்-4-இல் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு பேரிடா் மீட்புப் படையின் தேவை நீண்ட காலமாக உணரப்பட்டு வருகிறது.

திட்டங்களின்படி, தில்லி காவல்துறை, துணை ராணுவப் படையினா் மற்றும் முன்னாள் அக்னிவீா்கள் உட்பட தகுதியான விண்ணப்பதாரா்களின் நேரடி ஆட்சோ்ப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, பேரிடா் அவசரகால நிவாரணப் படையை தில்லி அரசு உருவாக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments