FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.

Updated On : 21 நவம்பர் 2016, 12:58 am IST
பகிர்:

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது.
இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது.
காவல்துறை ஒருவரை அரெஸ்ட் வாரண்ட் இல்லாமல் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அரெஸ்ட் வாரண்டுடன் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அப்படி கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் வர என்ன செய்ய வேண்டும்? ஜாமீனில் வெளிவருவது, பரோலில் வெளிவருவது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? நீதிமன்றங்களின், காவல்துறையின் அதிகார எல்லைகள் எவை? நீதிமன்ற நடைமுறைகள் எவை? வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கும், வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக் கொள்வது? ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும்? குடும்பநல நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களைப் பற்றி இந்நூல் மிக மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. சாமானிய மக்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments