சதுரகிரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
தை அமாவாசையொட்டி பிப்ரவரி 2-ம் தேதி முதல் பக்தர்கள் சதுகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை 6 மணிமுதல் தாணிப்பாறையில் குவியத் துவங்கினர்.
அதிகாலை சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி கோயில்களில் மூலவர்களுக்கு பல்வேறு அபிகேஷகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.
Advertisement
Advertisement
ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.