காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!
அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற கருட சேவை உற்சவம் தொடர்பாக...
ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயிலில் கருட சேவை உற்சவம் இன்று(மே 3) நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்ட திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன் நாள் கோயிலில் சித்திரை மாத பெருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உற்சவர் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.
உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று காலை, அஷ்டபுஜ பெருமாளுக்கு பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு, ரோஸ் நிற பட்டுடுத்தி, திரு ஆபரணங்கள் அணிந்து கருட சேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயிலில் இருந்து புறப்பட்ட கருட சேவை, ரங்கசாமி குளம், டி.கே. நம்பி தெரு, செட்டி தெரு, வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வழியெங்கும் பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.