FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிழலாடும் நினைவு: கவிஞர் இரா .இரவி

6 ஆகஸ்ட் 2025, 5:52 pm IST
பகிர்:

காதல் தோல்வியில் முடிந்து விட்டாலும்
காதல் நினைவுகள் மூளையில் நிழலாடும்!

மறந்து விடு என்று உதடுகள் உரைத்தாலும்
மறக்க முடியாமல் உள்ளங்கள் தடுமாறும் !

பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள்
பழையது என்ற போதும் பசுமை நினைவுகள் !

Advertisement

Advertisement

கடவுள் உண்டா? இல்லையா? தர்க்கத்தில்
காதல் முதல்படி  எடுத்து வைத்தோம் !

இளையராசாவை இருவருக்கும் இனிதே பிடித்தது
இசையால் இருவரும் கருத்து ஒருமித்தோம் !

நடிகர் கார்த்திக் பிடிக்கும் என்றாள் அவள்
நடிகர் கார்த்திக் பிடிக்காமல் ஆனது எனக்கு !

கவிதை எழுதிடக் காரணமாக இருந்தவள்
கவிதையை ரசித்து ஊக்கப்படுத்தி மகிழ்வித்தாள் !

கருப்புத் தான் என்ற போதும் அழகாக இருந்தாள்
கார்மேகக் கூந்தலோ இடைக்குக் கீழ் இருக்கும் !

பொது அறிவில் போதுமான நுட்பம் உண்டு
பொதுவாக நல்ல குணம் தான் அவளுக்கு !

சொல்வதை அப்படியே ஏற்பதில்லை அவள்
சொல்லியதில் மறுப்பு இருந்தால் தெரிவிப்பாள் !

நல்லதைப் பாராட்டிட தயங்கியது இல்லை
அல்லதை நீக்கிட அறிவுறுத்தியது உண்டு !

அவள் அருகே இருந்தால் நேரம் போதாது
அவள் பிரிந்து இருந்தால் நேரம் போகாது !

அதிகம் பேசாமல் அளந்தே பேசுவாள்
அறிவார்ந்த பேச்சாக அவை இருக்கும் !

மனித நேயம் காட்டுவதில் மகத்தானவள் அவள்
மனிதர்களை மதிக்க வேண்டுமென வலியுறுத்தியவள் !

வருடக் கணக்கில் காலங்கள் கழிந்தாலும்
வஞ்சியின் நினைவு எஞ்சியுள்ளது இன்னும் !

நிழல் என்பது பிரியாது உடன் வரும்
நினைவு என்பது மறக்காது உள் இருக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments