FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 26 டிசம்பர் 2024, 9:35 pm IST
டெம்பா பவுமா - படம் | AP
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20, ஒருநாள் தொடர்கள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இன்று (டிசம்பர் 26) செஞ்சூரியனில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 71 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டோனி டி ஸார்ஸி (2 ரன்கள்), ரியன் ரிக்கல்டான் (8 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அய்டன் மார்க்ரம் 47 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 129 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments