FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இவர் முக்கிய வீரராக இருந்திருப்பார்; அணியில் இடம்பெறாத வீரர் குறித்து சுரேஷ் ரெய்னா!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

Updated On : 19 ஜனவரி 2025, 4:14 pm IST
சுரேஷ் ரெய்னா (கோப்புப் படம்)
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜனவரி 18) அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு, இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

Advertisement

Advertisement

முக்கியமான வீரர்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சூர்யகுமார் யாதவ் அதிகம் மிஸ் செய்யப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சூர்யகுமார் யாதவ்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார். அவர் மைதானத்தில் அனைத்துப் புறங்களிலும் ஸ்கோர் செய்யும் திறன் கொண்டவர். ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் அவரால் ஓவருக்கு 9 ரன்கள் அடிக்க முடியும். அவரது அதிரடியான பேட்டிங்கால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அணியில் ஃபார்மில் இல்லாத முதல் 3 பேரின் மீது பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளது. சூர்யகுமார் எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி நன்றாக விளையாடக் கூடியவர் என்றார்.

முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments