FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.

Updated On : 31 ஜூலை 2025, 6:27 pm IST
கேப்டன் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

கேப்டனாக வரலாறு படைத்த ஷுப்மன் கில்

முதல் இன்னிங்ஸில் 15* ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை இளம் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த 1978-79 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது வந்தது. அதனை தற்போது ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன்கள்

733* ரன்கள் - ஷுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிராக (2025)

732 ரன்கள் - சுனில் கவாஸ்கர் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக (1978/79)

655 ரன்கள் - விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, (2016/17)

610 ரன்கள் - விராட் கோலி - இலங்கைக்கு எதிராக, (2017/18)

593 ரன்கள் - விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, (2018)

summary

Indian team captain Shubman Gill has created history in Test matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments