FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய வீரர்களுடன் சண்டையிட்ட பயிற்சியாளர்..! வைரலாகும் விடியோ!

இந்திய அணியின் பயிற்சியாளர் வீரர்களுடன் சண்டையிட்டது குறித்து...

29 ஜூன் 2025, 3:05 pm IST
இந்திய வீரர்களுடன் சண்டையிட்ட பயிற்சியாளர்... - படங்கள்: எக்ஸ் / ரே ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்
பகிர்:

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 373 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்த போட்டி ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி எடுத்துவரும்போது இந்திய வீரர்களுடன் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட விடியோ காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

இதில் இவர்கள் நிஜமாகவே அடித்துக்கொள்ளவில்லை, டபிள்யூடபிள்யூஇ விளையாட்டைப் போல கிண்டலாக நடித்து வந்தார்கள்.

இந்த சம்பவத்தை விடியோவாக எடுத்த ரே ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “வலைப்பயிற்சியில் என்டர்டெயின்மென்ட் இருக்காது என யார்க் கூறியது?” எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

summary

During India’s practice session at Edgbaston, Arshdeep Singh and Akash Deep were seen rolling their arms at the nets, hinting at the change in the pace attack for the crucial second Test against England. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments