தங்க மனசுக்காரன் சஞ்சு சாம்சன்: ரசிகருக்கு புதிய மொபைல் போன் பரிசளிப்பு!
சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் ரசிகருக்கு புதிய மொபைல் போனை பரிசளித்தது குறித்து...
சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் கேரளத்தில் ரசிகர் ஒருவருக்கு புதிய மொபைல் போனை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு இடம் மாறியுள்ள சாம்சன் இதுவரை சுமாரான விளையாட்டையே விளையாடி வருகிறார்.
கேரளத்தில் வாக்களிக்கச் சென்ற சஞ்சு சாம்சனிடம் புகைப்படம் எடுத்த ரசிகரது மொபைல் உடைந்திருப்பதைக் கண்டு, அவருக்கு தன்னிடம் இருந்த ரூ.30,000 மதிப்பிலான புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இது குறித்து அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:
சஞ்சு சாம்சன் - தங்க மனசுக்காரன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சஞ்சு சாம்சன் கேரளத்திற்கு வந்திருக்கிறார். அவரது ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ரசிகரின் போனில் டிஸ்பிளே உடைந்திருப்பதைக் கண்ட சஞ்சு சாம்சன் விசாரித்துள்ளார்.
போனை அப்டேட் செய்யும்போது இப்படி ஆகிவிட்டதெனக் கூறியுள்ளார். தனது காரில் வைத்திருந்த புதிய மொபைல் போனை ரசிகருக்கு பரிசாக அளித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.