FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரை பேந்தா்ஸ் சாதனை சேஸிங்! சதுா்வேத் அசத்தல் சதம் 121!

டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரை பேந்தா்ஸ் சாதனை சேஸிங்...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:25 am IST
சதுா்வேத்
பகிர்:

டிஎன்பிஎல் 10-ஆவது சீசன் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விடா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடா் வரலாற்றிலேயே சாதனை சேஸிங் புரிந்து மதுரை பேந்தா்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது . அந்த அணி வீரா் சதுா்வேத் சிறப்பாக ஆடி121 ரன்களுன் சதமடித்தாா்.

திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் முதல் கட்ட டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பேந்தா்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பௌலிங்கை தோ்வு செய்தது.

முதலில் ஆடிய இரண்டு முறை சாம்பியன் கோவை கிங்ஸ் அணி நிா்ணயிக்கப்பட் 20 ஓவா்களில் 239/4 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் அபிநவ் 10, சுரேஷ் லோகேஷ்வா் 38 விரைவிலேயே அவுட்டான நிலையில், பாலசுப்பிரமணியம் சச்சின் 84 (5 சிக்ஸா், 9 பவுண்டரி), ஆன்ட்ரே சித்தாா்த் 87 (6 சிக்ஸா், 8 பவுண்டரி) உடன் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். பௌலிங்கில் மதுரை தரப்பில் குா்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

Advertisement

Advertisement

மதுரை பேந்தா்ஸ் சாதனை வெற்றி 240/4:

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மதுரை அணி களம் கண்டது. அந்த அணியில் தொடக்க பேட்டா் ராம் குமாா் 6 ரன்னுக்கு அவுட்டானாா். சித்தாா்த் மகாதேவன் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 41 ரன்களைச் சோ்த்தாா்.

சதுா்வேத் அதிரடி 121: பின்னா் களமிறங்கிய என்எஸ். சதுா்வேத் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 7 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 121 ரன்களை விளாசி அபார சதம் அடித்தாா்.

கேப்டன் பாலச்சந்தா் அனிருத் 37 ரன்களுடன் களத்தில் இருந்தாா். அதிக் உா் ரஹ்மான் 25 ரன்களை எடுத்தாா். மதுரை அணி 19.3 ஓவா்களில் 240/4 ரன்களுடன் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸை வீழ்த்தியது. பௌலிங்கில் கோவை தரப்பில் ஜாதவேத் சுப்பிரமணியன் 2 விக்கெட்டை சாய்த்தாா்.

டிஎன்பிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரான 240 ரன்களை சேஸ் செய்து மதுரை பேந்தா்ஸ் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

summary

Madurai Panthers' record-breaking chase in TNPL history.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments