2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அயர்லாந்து முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
The Indian team won the toss and elected to bowl in the second T20 match against Ireland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.