முகப்பு
ஐபிஎல்

சன்ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன்: டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன் என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

Updated On : 12 அக்டோபர், 2021 at 5:41 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:51 AM

சன்ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன் என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், இரு ஆட்டங்களில் மொத்தமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கடைசி ஆட்டங்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியை விட்டு வார்னர் விலகுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த வார்னர் கூறியதாவது:

Advertisement

ஹைதராபாத் என்னுடைய 2-வது சொந்த ஊர். ரசிகர்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். அடுத்த வருடமும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். சன்ரைசர்ஸ் அணியும் நிர்வாகமும் என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொறுத்தே அது அமையும். மெகா ஏலத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார். 

Related Article

கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன்?: முதல்முறையாக உணர்வுகளை வெளிப்படுத்திய விராட் கோலி

விடியோ வெளியிட்டு தந்தையான செய்தியை உலகுக்கு சொன்ன பிரபல வீரர் பேட் கம்மின்ஸ்

ஆர்சிபி தோற்றதால் சமூகவலைத்தளங்களில் அருவருப்பான விமர்சனங்கள்: மேக்ஸ்வெல் வேதனை

தவறான தீர்ப்புக்குக் கோபமடைந்த விராட் கோலி: விளக்கம் அளித்த நடுவர் மீது கவாஸ்கர் அதிருப்தி

அதிக சிக்ஸர்களும் ரன் எடுக்காத பந்துகளும்: ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தி வரும் ருதுராஜ்

விராட் கோலியின் கனவை மூன்று பந்துகளில் சிதறடித்த நரைன்

16 வயதில் ஒருநாள் சதம்: உலக சாதனை படைத்த வீராங்கனை (விடியோ)

ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.