சாதித்த பேட்டர்கள்: ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக...
ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு வருடத்தில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு வருடத்தில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 1001 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு 2018-ல் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது அதிகபட்சமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதன் சாதனையை இந்த வருட ஐபிஎல் முறியடித்து விட்டது. சிக்ஸர்கள் அடிப்பதில் பேட்டர்களின் திறமை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தப் புள்ளிவிவரம் அதனை நன்கு உறுதிப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 37 சிக்ஸர்களுடன் பட்லர் முதலிடத்திலும் லிவிங்ஸ்டன் 34 சிக்ஸர்களுடன் 2-ம் இடத்திலும் 32 சிக்ஸர்களுடன் ரஸ்ஸல் 3-ம் இடத்திலும் உள்ளார்கள்.
சிஎஸ்கே அணியில் ஷிவம் டுபே அதிகபட்சமாக 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்ததாக ராயுடு 15 சிக்ஸர்களும் உத்தப்பா 14 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.