அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி..! மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டம்!
லக்னௌ அணி வீரர் மீண்டும் சர்ச்சையான வகையில் விக்கெட்டினை கொண்டாடியது குறித்து...
லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான வகையில் விக்கெட்டினை கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது.
கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய (மார்ச்.8) போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்ததாக கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் 6.2ஆவது ஓவரில் சுனில் நரைன் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.
Advertisement
Advertisement
வழக்கமாக தனது லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடியுள்ளார். ஏற்கனவே, 2 போட்டிகளிலும் இவர் இப்படி செய்ததற்காக 2 முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி
இதனால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்று சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
விராட் கோலியிடம் வில்லியம்ஸ் இதேபோன்று வம்பிழுக்க அவரை விராட் கோலி தனது பாணியில் அடித்து துவைத்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், 3ஆவது முறையாகவும் திக்வேஷ் ரதி செய்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த முறையும் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.