விராட் கோலி - சால்ட்.. 
ஐபிஎல்

விராட் கோலி - சால்ட் விளாசல்: ஆர்சிபிக்கு 4-வது வெற்றி!

விராட் கோலி - சால்ட் விளாசல்: ஆர்சிபிக்கு 4-வது வெற்றி.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றிபெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் சுற்றுக்கான 28-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இதில், முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களம்புகுந்தனர்.

நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்ந்த நிலையில் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின்னர் வந்த ரியான் பராக் சில பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டினார். 30 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியி நிதானமாக அதேவேளையில் அதிரடி காட்டவும் தவறவில்லை. சிறப்பாக விளையாடி தனது 11-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

47 பந்துகளில் 75 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அவருக்குப் பின்னர் வந்த ஹெட்மயர் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் அதிரடி காட்டிய துருவ் ஜூரேல், 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ரானா ஒரே பந்தில் பவுண்டரியுடன் முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஸ்வர் குமார், யஷ் தயாள், ஹேசில்வுட், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி - பில் சால்ட் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட் 65 ரன்களில் (5 பவுண்டரி, 6 சிக்ஸர்) குமார் கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின்னர் வந்த தேவ்தத் படிக்கல், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆட்டத்தை முடித்துவைத்தார். இருவரும் இணைந்து நேர்த்தியாக விளையாடினாலும், ஏதுவான பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டனர்.

டி20 போட்டிகளில் 100-வது அரைசதத்தை விளாசிய விராட் கோலி 62 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்), தேவ்தத் படிக்கல் 40 ரன்களும் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து களத்தில் இருந்தனர்.

முடிவில், 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி. இதன் மூலம், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

6-வது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மேலும், அதேபோல 6-வது போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு 4-வது தோல்வியாக அமைந்தது.

இதையும் படிக்க: பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி! ஏன் தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT