FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

பௌச்சர், கில்கிறிஸ்டை தொடர்ந்து தோனி புதிய சாதனை!

800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். 

Updated On : 29 செப்டம்பர் 2018, 10:51 am IST
பகிர்:

முன்னணி விக்கெட் கீப்பர்கள் மார்க் பௌச்சர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி 3-ஆவது இடத்தைப் பிடித்து புதிய சாதனைப் படைத்தார். 

வங்கதேசத்துடனான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர்களில் பௌச்சர், கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து 3-ஆவது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் 2 ஸ்டம்பிங்குகள் செய்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 800 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் 800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். 

Advertisement

Advertisement

இதில் தென் ஆப்பிரிக்காவில் மார்க் பௌச்சர் 998 பேரையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 905 பேரையும் ஆட்டமிழக்கச் செய்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.

அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் (184) செய்த விக்கெட் கீப்பர்களில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தோனியை தொடர்ந்து இலங்கையின் குமார் சங்ககாரா 139 மற்றும் ரோமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்சுகள், 38 ஸ்டம்பிங்குகளுடன் 294 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 327 ஒருநாள் போட்டிகளில் 306 கேட்சுகள், 113 ஸ்டம்பிங்குகளுடன் 419 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதுபோன்று 93 டி20 போட்டிகளில் 54 கேட்சுகள் 33 ஸ்டம்பிங்குகளுடன் 87 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments