FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

25 ஜனவரி 2024, 12:04 pm IST
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
பகிர்:

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவும், ஸ்பெயினும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, 22-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் கோலடித்தது.
இதனால் நெருக்கடிக்கு உள்ளான இந்திய அணி கடுமையாகப் போராடியபோதும், முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் சிம்ரன்ஜீத் சிங் கோலடிக்க, ஸ்கோரை சமன் செய்தது இந்தியா.
இதனால் உத்வேகம் பெற்ற இந்திய அணி 66-ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை ஹர்மான்பிரீத் அடித்தார். இதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் அபாரமாக ஆடியபோதும், தங்களுக்கு கிடைத்த 9 பெனால்டி வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே கோலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 2005-இல் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி. வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா.
பெல்ஜியம் தனது காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவையும், ஜெர்மனி தனது காலிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments