FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீன ஓபன்:காலிறுதியில் முர்ரே, பெட்ரா

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

25 ஜனவரி 2024, 10:12 am IST
பகிர்:

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் முர்ரே 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்நெட்சோவை தோற்கடித்தார்.
முர்ரே தனது காலிறுதியில் சகநாட்டவரும், தகுதி நிலை வீரருமான கைல் எட்மான்டை எதிர்கொள்கிறார். முன்னதாக எட்மான்ட் தனது 2-ஆவது சுற்றில் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கவுள்ளார் அலெக்சாண்டர். ஃபெரர் தனது முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை வீழ்த்தினார். பெட்ரா தனது காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். கீஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (2), 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவைத் தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments