FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வெளிநாட்டில் சொத்து: சச்சின் தரப்பு விளக்கம்

அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு முறையாக வரி செலுத்தப்பட்டதாக சச்சின் டெண்டுல்கர்...

Updated On : 4 அக்டோபர் 2021, 12:12 pm IST
பகிர்:

வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சச்சின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

பல்வேறு ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு அமைப்பு, பண்டோரா பேப்பர்ஸ் என்கிற பெயரில் 91 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி உள்ளிட்ட 380 பிரபலங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கியுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள பலரும் வெளிப்படையான முறையில் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்கள். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பெயரில் கரிபீயன் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை சச்சின் தரப்பு மறுத்துள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை. அவை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு முறையாக வரி செலுத்தப்பட்டதாக சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments