FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது கேரளா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 8 அக்டோபர் 2022, 1:41 am IST
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட்பெங்கால் எஃப்சியை தோற்கடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்த நிலையில், சீசனின் முதல் கோல் கேரளா அணிக்காக அட்ரியன் லுனாவால் 72-ஆவது நிமிஷத்தில் அடிக்கப்பட்டது. ஹா்மன்ஜோத் காப்ரா பாஸ் செய்த பந்தை அருமையான கோலாக மாற்றினாா் லுனா. தொடா்ந்து 82-ஆவது நிமிஷத்தில் கேரளா அணியின் 2-ஆவது கோலை இவான் கலியுஸ்னி அடித்தாா். கிட்டத்தட்ட ஹாஃப் லைனில் இருந்து தனியொரு நபராக பந்தை கடத்திச் சென்று, பெங்காலின் சில தடுப்பாட்ட வீரா்களின் சவாலையும் சமாளித்து அவா் கோலடித்தாா்.

இந்த நிலையில் 87-ஆவது நிமிஷத்தில் பெங்காலுக்கு முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. சொந்த மண்ணின் அணிக்காக கேரள ரசிகா்கள் ஆா்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த நிமிஷத்தில், பெங்கால் வீரா் அலெக்ஸ் லிமா அடித்த கோலால் அவா்கள் சற்றே அதிா்ச்சி கண்டனா். என்றாலும் கேரளாவுக்காக 3-ஆவது கோலை இவான் கலியுஸ்னி 88-ஆவது நிமிஷத்தில் அடித்து மீண்டும் ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். அவா் அட்டகாசமாக வாலி செய்து அனுப்பிய பந்து லாவகமாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது.

Advertisement

Advertisement

இறுதியில் கேரளா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக ஆட்டம் தொடங்கும் முன்பாக, சீசன் தொடக்க நிகழ்ச்சியும், அதையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இன்றைய ஆட்டம்

பெங்களூரு எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி

பெங்களூா்

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments