FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பாரா?

காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. 

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 11:48 am IST
பகிர்:

காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. 

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. 

Advertisement

Advertisement

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் வாஷிங்டன், ஃபீல்டிங் செய்தபோது கீழே விழுந்ததில் இடது தோள்பட்டையில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓய்வறைக்கு அவர் திரும்பினார். முன்னெச்சரிக்கையாக அந்த ஆட்டத்தில் அவர் மேலும் பங்கேற்கவில்லை. ஞாயிறு வரை கவுன்டி கிரிக்கெட்டில் வாஷிங்டன் விளையாட வேண்டும். அதற்குப் பிறகு ஒருநாள் தொடரில் பங்கேற்க ஹராரே செல்வார். தற்போது தோள்பட்டைக் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் வாஷிங்டன் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் கே.எல். ராகுலை கேப்டனாக நியமித்து ஜிம்பாப்வே தொடருக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதனால் காயம் விரைவில் குணமாகி ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments