FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து தோல்வி: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Updated On : 9 ஜூலை 2022, 10:35 pm IST
படம்: பிசிசிஐ
பகிர்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 46 (29), ரோஹித் சர்மா 31 (20) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தின் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியாவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து தொடரை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments